முகப்பு பக்கத்திற்கு செல்லுங்கள்
மெனுவை திறக்க கிளிக் செய்யவும்
மெனுவை மூட கிளிக் செய்யவும்
முக்கிய உள்ளடக்கத்தை தொடங்குங்கள்

மத்திய பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கான சோயாபீன் பயிர்கள் மற்றும் ஸ்ப்ரே சேவைகளுக்கான புதுமையான களைக்கொல்லியை எஃப்எம்சி நிறுவனம் தொடங்கியுள்ளது

போபால், மே 26, 2023: எஃப்எம்சி, ஒரு முன்னணி விவசாய அறிவியல் நிறுவனமாகும், இன்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் ட்ரோன் ஸ்ப்ரே சேவைகளை தொடங்குவதாக அறிவித்துள்ளது. மாநிலத்தில் மிகவும் பயிரிடப்பட்ட பயிர்களில் ஒன்றான சோயாபீன் பயிர்களுக்கான ஒரு புதிய களைக்கொல்லியான கேலக்ஸி® நெக்ஸ்ட்-ஐ நிறுவனம் தொடங்கியது.

எம்எஃப்சி கார்ப்பரேஷனின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. மார்க் டக்ளஸ் மற்றும் எம்எஃப்சி ஆசிய பசிபிக் பகுதியின் தலைவர் திரு பிரமோத் தோட்டா ஆகியோர் முன்னிலையில், புதிய களைக்கொல்லி மற்றும் ட்ரோன் ஸ்ப்ரே சேவை மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் அறிமுகப்படுத்தப்பட்டது. கூடுதலாக, சுயமாக-இயக்கப்படும் பூம் ஸ்ப்ரே சேவைகளின் வெற்றிகரமான நேரடி செயல்விளக்கம் விவசாயி வயல்களில் மேற்கொள்ளப்பட்டது, அடுத்த மூன்று மாதங்களில் இந்த சேவைகள் நாடு முழுவதும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

""--

இந்தியாவில் விமான போக்குவரத்து விதிமுறைகளை மேற்பார்வையிடும் அரசு நிறுவனமான சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தால் ட்ரோன் சேவை அங்கீகரிக்கப்பட்டது. இந்தச் சேவையானது உடல் உழைப்பின் தேவையைக் குறைக்கும் அதே வேளையில் விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயம் தொடர்பான ஆளில்லா வான்வழி வாகனங்கள் (யூஏவிகள்) சீரான தெளிப்பு மற்றும் கவரேஜ் மீது அதிக கட்டுப்பாட்டை வழங்குகின்றன. மேலும் எஃப்எம்சி-யின் பிரீமியம் மற்றும் விவசாயிகளின் நம்பகமான பிராண்டுகளான கொரோஜன்® இன்செக்ட் கண்ட்ரோல் மற்றும் பெனிவியா® பூச்சிக்கொல்லி போன்ற பயிர் பாதுகாப்பு தயாரிப்புகள் மூலம் துல்லியத்தை மேம்படுத்துகிறது. ஒவ்வொரு ஸ்ப்ரே ட்ரோனாலும் சுமார் 15 நிமிடங்களில் மூன்று முதல் நான்கு ஏக்கருக்கு தெளிக்க முடியும், இது தெளிக்கும் வேலையை எளிதாகவும் திறமையாகவும் செய்கிறது. யுஏவி களைப் பயன்படுத்துவது நீரிழப்பு மற்றும் வெப்ப பக்கவாதம் போன்ற காலநிலை அபாயங்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும். கூடுதலாக, இந்தியாவில் விளையும் பயிர்கள் அனைத்திற்கும் உள்ளீட்டு வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் சிறப்புப் பயிற்சித் திட்டங்களை எஃப்எம்சி இந்தியா விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. ஸ்ப்ரே சேவைகள் எளிதில் அணுகக்கூடிய வகையில் பிராந்திய மொழிகளில் எஃப்எம்சி இந்தியா ஃபார்மர் செயலி மூலம் கிடைக்கும்.

“நாட்டில் விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கு ட்ரோன் மற்றும் பிற ஸ்பிரே சேவைகளில் இந்திய அரசாங்கத்தின் உள்ளடக்கிய சீர்திருத்தங்களுக்கு ஏற்ப எஃப்எம்சி-யின் நடவடிக்கை உள்ளது" என்று எஃப்எம்சி இந்தியாவின் தலைவர் திரு ரவி அன்னவரபு கூறியுள்ளார்.

“பயிர் பாதுகாப்பு மற்றும் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது மிகவும் முக்கியமானது. உணவு முறைகளை மாற்றுவதில் இந்தியா முன்னணியில் உள்ளது, மத்தியப் பிரதேசம் சந்தை சார்ந்த, தொழில்நுட்பம் சார்ந்த, மற்றும் விவசாயிகளை மையமாகக் கொண்ட மாநிலம், இங்கு இந்த முன்னேற்றம் சிறப்பாகக் காணப்படுகிறது. எஃப்எம்சி ஸ்ப்ரே சேவைகளை அறிமுகப்படுத்திய முதல் மாநிலங்களில் ஒன்றான மத்தியப் பிரதேசம், கிராமப்புற நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக அணுகல் மற்றும் பயிற்சி அளிப்பதில் எங்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், கோடைப் பருவகாலத்திற்கு முன் சோயாபீன் உற்பத்திக்கான ஆக்கப்பூர்வமான தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் மத்தியப் பிரதேசத்தில் விவசாயத் துறையின் விரிவாக்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்.”

மத்திய மற்றும் தீபகற்ப இந்தியாவின் மானாவாரி வேளாண் சுற்றுச்சூழல் அமைப்பில் சோயாபீன், அதிக மதிப்புள்ள எண்ணெய் வித்து பயிர் முதன்மையாக பயிரிடப்படுகிறது, மத்தியப் பிரதேசம் மிகப்பெரிய உற்பத்தி செய்யும் மாநிலமாக உள்ளது. கேலக்ஸி® நெக்ஸ்ட் களைக்கொல்லி என்பது ஒரு தனித்துவமான, தனியுரிமம் பெற்ற நிறுவனம் கண்டுபிடித்த தயாரிப்பு ஆகும். இது இரண்டு வேறுபட்ட செயல் முறைகளைக் கொண்டுள்ளது. இது புற்கள் மற்றும் அகன்ற இலைகளைக் கொண்ட களைகளைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் சோயாபீன்களில் உள்ள கமெலினா பெங்காலென்சிஸ், கமெலினா கம்யூனிஸ் மற்றும் அக்கலிபா இண்டிகா போன்ற கடினமான களைகளையும் திறம்பட கட்டுப்படுத்துகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள செஹோர், உஜ்ஜைன், இந்தூர், தார், ரத்லாம், சாகர், சிந்த்வாரா, குணா மற்றும் அசோக் நகர் போன்ற மாவட்டங்களில் எஃப்எம்சி மூலம் தயாரிப்பு கிடைக்கும்.

“ஆத்மநிர்பர் பாரதத்தின் இந்தியன் நேஷனல் விஷன் ஆனது உணவு இறையாண்மைக்கு முன்னுரிமை அளிக்கிறது என்று திரு அன்னவரபு கூறினார். “எஃப்எம்சி இல் உள்ள அதே வளர்ச்சி சார்ந்த முன்னோக்கு மற்றும் விவசாய நிலைத்தன்மை மற்றும் புதுமைக்கான அர்ப்பணிப்பை பராமரிப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். மத்தியப் பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு பல்வேறு பயிர்களில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த ஸ்ப்ரே சேவைகளை அறிமுகப்படுத்தி, குறிப்பாக சோயாபீன் விவசாயிகளுக்காக கேலக்ஸி® நெக்ஸ்ட் களைக்கொல்லியை அறிமுகப்படுத்துவதன் மூலம், எங்கள் கூட்டாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் எங்கள் சேவைகளை வடிவமைப்பதிலும் உள்ளூர்மயமாக்குவதிலும் நாங்கள் தொடர்ந்து நிலைத்திருப்போம்

தயாரிப்பு வெளியீடு மற்றும் கள விளக்கத்தைத் தவிர, எஃப்எம்சி இந்தியாவில் உள்ள அவர்களின் சிறந்த 25 கூட்டாளர்களைக் கௌரவிக்கும் வகையில் போபாலில் ஒரு விழாவை ஏற்பாடு செய்தது. நிறுவனத்தின் மூத்த தலைவர்கள் இந்திய விவசாயிகளுக்கு புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அறிமுகம் செய்வதில் ஒத்துழைப்பதில் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அங்கீகரித்தனர்.

எஃப்எம்சி பற்றி

எம்எஃப்சி கார்ப்பரேஷன் என்பது ஒரு சர்வதேச விவசாய அறிவியல் வணிகமாகும், இது சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப வளர்ந்து வரும் உலகளாவிய மக்கள்தொகைக்கு உணவு, தீவனம், நார் மற்றும் எரிபொருளை உற்பத்தி செய்வதில் விவசாயிகளுக்கு உதவ உறுதிபூண்டுள்ளது. உயிரியல், பயிர் ஊட்டச்சத்து, டிஜிட்டல் மற்றும் துல்லியமான விவசாயம் போன்ற மேம்பட்ட பயிர் பாதுகாப்பு தீர்வுகளை எஃப்எம்சி வழங்குகிறது. இந்த தீர்வுகள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில், விவசாயிகள், பயிர் ஆலோசகர்கள் மற்றும் தரை & பூச்சி மேலாண்மை வல்லுநர்களுக்கு பொருளாதார ரீதியாக அவர்களின் கடினமான சவால்களை சமாளிக்க வலிமை அளிக்கிறது. உலகளவில் 100-க்கும் மேற்பட்ட தளங்களில் தோராயமாக 6,600 ஊழியர்களுடன், புதிய களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சாணகொல்லி செயலிலுள்ள பொருட்கள், தயாரிப்பு உருவாக்கங்கள் மற்றும் முன்னோடி தொழில்நுட்பங்களை கண்டறிய எஃப்எம்சி உறுதியளிக்கிறது.

மேலும் அறிய fmc.com மற்றும் ag.fmc.com/in/en இணையதளத்தைப் பார்வையிடவும் மற்றும் எஃப்எம்சி இந்தியாவை பின்வரும் சமூக வலைதளத்தில் பின்தொடருங்கள் பேஸ்புக்® மற்றும் யூடியூப்®.